Monday, April 13, 2009

உன்னையே நீ அறிவாய் ! (அடிப்படை உண்மைகள்) - பாகம் 7



சென்ற பதிவில் நான் செய்திருந்த 'மலேசிய இந்திய' இனவாரிய ஆராய்ச்சியை மையமாக வைத்து மேலே கொடுக்கப் பட்ட அட்டவணையை தயாரித்துள்ளேன். இது எங்கிருந்து கிடைக்க பெற்றது, எங்கனம் இந்த எண்ணிக்கைகளுக்கு வந்தீர்கள் என்றெல்லாம் கேட்காதீர்கள். மலேசிய அரசாங்க ஜனத்தொகை கணக்கீட்டில், தமிழர்கள், மலையாளிகள், தெலுங்கர்கள் என்ற பாகுபாடெல்லாம் காட்டப்பட வில்லை. அத்தகைய இனவாரி கணக்கீட்டை நீங்கள் எங்கு தேடுனீர்கள் என்றாலும், அது உங்களுக்கு கிடைக்கவும் மாட்டாது.

மேலை கொடுக்கப் பட்டுள்ள அட்டவணை நானாக, என் சுய புத்திக்கு எட்டிய வகையில் தயாரித்தது. அதை 'சரியான கணக்கு தான்' என்று ஏற்றுக் கொண்டால் சரிதான். 'சரியில்லை' என்று கூறினால், சரியில்லை தான். நான் கொடுத்திருக்கும் எண்ணிக்கைகளும், அட்டவணை கணக்கீடும் 'சரியே' என்கிற நிலைப்பாட்டோடு, என் எழுத்தை தொடருகிறேன்.

(என் முந்திய பதிப்பில் யாழ்பான தமிழர்களும், இந்திய முஸ்லீம்கள் மலேசிய ஜனத்தொகையில் தலா 150,000 இருப்பார்கள் என்று கூறியிருந்தேன். அதை தலா 120,000 ஆக மாற்றி இந்த அட்டவணையில் குறிப்பிட்டுள்ளேன்).சரி, இனி அட்டவணையில் கண்டுள்ள விவரங்களுக்கு வருவோம்.

இந்த அட்டவணையை கூர்ந்து கவனித்தீர்கள் என்றால், கீழ்கண்ட உண்மைகளை நீங்கள் உணர்வீர்கள்:-

1)). 2,100,000 மலேசிய இந்தியர்களின் ஜனத்தொகையில், 77 விழுக்காட்டினர் இந்திய தமிழர்கள்தான். மீதியுள்ள 23 விழுக்காட்டினர் தமிழர் அள்ளாத மற்ற இந்தியர்கள் (பஞ்சாபிகள், வட இந்தியர்கள், மலையாளிகள், யாழ்பான தமிழர்கள், தெலுங்கர்கள், இந்திய முஸ்லீம்கள்).

2)). ஆனால் நடுத்தர மற்றும் மேல்தர இந்தியர்கள் எனும் கணக்கீட்டில் உள்ள 730,600 இந்தியர்களில் வெறும் 322,000 (அதாவது 44%) பேர்கள்தான் இந்திய தமிழர்கள். மீதிப்பேர் இந்திய தமிழர் அல்லாத இனத்தவர்கள்.

3)). மேலும், வசதிகுறைந்த வகுப்பினர் எனும் கணக்கீட்டில் உள்ள 1,369,400 இந்தியர்களில் 1,288,000 (அதாவது 94%) பேர்கள் இந்திய தமிழர்கள் தான்.


(இந்திய முஸ்லீம்களில் பெரும்பாலோர் தமிழர்களாக இருந்தாலும், இஸ்லாமிய மதத்தை சார்ந்தவர்கள் என்கிற காரணத்தினால், மற்ற மலேசிய இந்திய இனங்களுக்கு இல்லாத, மலாய்கார்களை ஒட்டிய, பல சலுகைகளை இவர்கள் கெட்டிகாரத் தனமாக பெற்று விடுகிறார்கள் என்கிற உண்மை நாம் அனைவரும் அறிந்த ஒன்று. ஆதலால், இந்த வகுப்பினரை இந்திய தமிழர்கள் என்று வகைப் படுத்தாது, அவர்களை தனி ஒரு இன வகுப்பினாராக வரிசை படுத்தி உள்ளேன்).சரி, இனி சில நடைமுறை உண்மைகளுக்கு வருவோம்.


உண்மை நம்பர் 1

அரசாங்கத்தில் உள்ள மலாய்கார, சீனத் தலைவர்களை பொருத்த வரை 'மலேசிய இந்தியன்' என்பவர் இந்தியாவில் இருந்து இங்கு வந்து குடியேறிய ஒரு மலேசிய குடிமகன், அவ்வளவுதான். அவர் இந்திய தமிழரா, யாழ்பான தமிழரா, மலையாளியா, தெலுங்கரா, சீக்கியரா என்கிற பாகுபாடெல்லாம் அவர்கள் பார்ப்பதில்லை. அதற்கு அவர்களுக்கு நேரமும் இல்லை.

மலேசிய பிற இன அரசியல் தலைவர்களை பொருத்தவரை, மலேசியாவில் உள்ள இந்தியர்களின் ஆதரவு அரசாங்கத்திற்கு குறைந்து வருகிறது. அந்த நிலைப்பாட்டை சரிசெய்ய, இந்தியர்களின்பால் சிறப்பு கவனம் செலுத்தப் பட வேண்டியது அவசியம் என்று அனைவரும் நினைக்கிறார்கள்.

இந்தியர்களுக்கு பிரத்தியேகமாக தக்க உபகாரங்கள் செய்யப் படாவிட்டால், அடுத்த தேர்தலில் இந்தியர்களின் ஆதரவு ஒட்டு மொத்தமாக எதிர்கட்சியினருக்க சென்று விடும் என்று யாவரும் பயப் படுகிறார்கள்.இந்த நிலையில், பாரிசான் நேஷனல் அரசாங்கமும் சரி, பக்கத்தான் ராக்யாட் தலைவர்களும் சரி, இந்தியர்களை விஸேசமாக கவனித்து தான் ஆக வேண்டும் என்கிற நிலைப் பாட்டிற்கு ஆணித்தரமாக வந்து விட்டார்கள்.

ஆனால், இந்தியர்களின் பிரச்சனைகளுக்கு தீர்வுகள் காண முனையும் முன்னர், இந்தியர்களின் உண்மையான நிலை என்ன என்பதை முறையாக கிரகித்து, நம் இனத்தின் இன்றைய நிலைப் பாட்டை அவர்கள் முதலில் தின்னமாக புரிந்து கொண்டாக வேண்டும். அப்படி புரிந்து கொள்ளாத நிலையில் மலேசிய இந்திய இனத்திற்கு யாராலும் பெரிய் முறுமலர்ச்சி எதையும் ஏற்படுத்த முடியாது என்பது என்னுடைய அபிப்பிராயம். (வியாதி என்னவென்று அடையாளம் கண்டால்தானே அதற்கு தகுந்த சிகிச்சை செய்ய முடியும்).

இங்கு அரசாங்கத்தில் உள்ள தலைவர்கள் யாருக்காவது இங்குள்ள "இந்தியர்களின் பிரச்சனைகள் என்ன? அவற்றை எப்படி அனுகி, எப்படி கலைவது?" என்கிற கேள்விகளுக்கு பதில் தெரியுமா என்று கேட்டால், "இல்லை தெரியாது" என்றே சொல்லத் தோன்றுகிறது. காரணம் 'மலேசிய இந்தியன்' என்பவன் ஒரு ஒற்றை இனத்தவன் அல்ல. ஒரே மாதிரி இனக் குணாதிசயங்களை கொண்டவனும் அல்ல. ஆறு, ஏழு வெவ்வேறு இனங்களை உள்ளடக்கிய ஒரு பலதரப் பட்ட இனக் குழுமத்தின் அவன் ஒரு உள்ளடக்கப் பட்ட அங்கத்தினன்.

அந்த குழுமத்தில் பல பாசைகளை இழகுவாக பேசி, பிற இனத்தவரின் தோளில் கை போட்டு, அனைவருக்கும் ஈடு கொடுத்து, இனிமையாகப் பலகி வாழ்க்கையையும் அட்டகாசமாக ஜெயித்து வந்த அசோக்கும் இருப்பான், வேலை வெட்டி இல்லாமல், பிற மொழி எதுவும் புரியாமல், கள்ள சம்சுவுக்கு அடிமையாகி, பட்ட பகலில் பஸ் ஸ்டாண்டில் கிழிந்த, அழுக்குச் சட்டையுடன் யாவரும் பார்க்க, குடி போதையில் மல்லாந்து கிடக்கும் கருப்பையாவும் இருப்பான்.

பிற இனத்தவருக்கு, அசோக்கையும் கருப்பையாவையும் மாறி, மாறி பார்க்கும் போது ஒன்றுமே புரியாது. இவர்களிடையே ஏன் இந்த வேறுபாடு? இருவரும் இந்திய வம்சாலியினர் தானே? ஒருவரால் முடியும்போது, ஏன் மற்றவரால் முடியவில்லை? என்கிற கேள்விகள் எல்லாம் அவர்கள் மனங்களில் அடிக்கடி எழுந்தாலும், அது குறித்து விடைகள் கிடைக்கும் அளவிற்கு அவர்கள் யாரும் சிந்திக்க மாட்டார்கள். காரணம் உங்களை பற்றி அவ்வளவு அக்கரை எடுக்க வேண்டிய அவசியம் சீனர்களுக்கோ மலாய்காரர்களுக்கோ கிடையாது. அவர் அவருக்கு, அவரவர் இனத்தின் நலன்களை பாதுகாப்பதற்கே நேரம் போதாது. இதற்கிடையில் இந்தியர்களை பற்றி அவர்கள் ஆளமாக யோசிக்க என்ன இருக்கிறது. "அதற்காகத் தான் இந்திய அரசியல்வாதிகள் இருக்கிறார்களே !" என்ற நினைப்பில் சும்மா இருந்து விடுவார்கள்.


உண்மை நம்பர் 2

இங்கு உள்ள நம் சமுதாய தலைவர்கள் யாருக்காவது இந்தியர்களின் உண்மையான நிலை என்ன என்பது புரிந்திருக்கிறது என்று நினைக்கிறீர்களா? புரிந்திருந்தால் 2008 ஆம் ஆண்டு தேர்தலில் நாம் கொடுத்த சவுக்கடிக்கு பின்னும் 'பாரிசான் நேஷனல் அரசாங்கத்தின் கீழ் இங்குள்ள இந்தியர்கள் வெகுவாக முன்னேற்றம் கண்டுள்ளனர்" என்று அறிக்கை விடுவார்களா?

நடைமுறை என்னவென்றால், இங்கு பதவியில் இருக்கும் யாருக்காகுமே இந்தியர்களின் பிரச்சனைகளை கிண்டி கிளறி, அலசி, ஆராய்ந்து, ஆணி வேர் வரை போய் பார்த்து உண்மைகளை கண்டறிய வேண்டும் எனும் வேட்கை கிடையாது. இங்குள்ள இனவாரி அரசியல் சூழ்நிலையில் சிறுபாண்மை இனங்களின் நலன்களுக்காக அதி தீவிரமாக யாரும் கொடி பிடிக்க தயார் நிலையில் இல்லை. அப்படி செய்வதால் அம்னோ தலைவர்களை தாம் பகைத்து கொள்ள நேரிடலாம் என்கிற உண்மை அவர்களை ஒரு பக்கம் அச்சுருத்தலாம். அல்லது நம் இனத்திற்கென்று அதிகமாக சவுண்டு விட்டால், எங்கு நமது பழைய கேஸுகளை எல்லாம் தூசு தட்டி சட்டத்தின் முன் இழுத்து விடுவார்களோ என்கிற பயமாகவும் இருக்கலாம்.

நம் ஊர் இந்திய அரசியல்வாதிகளை பற்றி சொல்ல வேண்டுமென்றால், ஒருவர் இந்தியர்களுக்கு என்று இருந்த இரண்டு மந்திரி பதவிகளில் ஒன்றை திருப்பி கொடுத்துவிட்டு, அதற்கு ஒரு பெரிய வியாக்கியானத்தையும் அளித்து, 30 வருஷமாக சிம்மாசனத்தை விட்டு எந்திரிப்பேனா என்று யானை பசை போட்டு உட்கார்ந்து இருக்கிறார்.

மற்றொருவர் ஒரு கட்சியை ஆரம்பித்து "அடிமட்ட இந்தியர்களை நாங்கள்தான் பிரதிநிதிக்கிறோம்" என்று கூறி, சிவப்பு சீருடை பெருங்கூட்டங்களை கூட்டி குவித்தார். ஆனால், "மனிதன் ஏதோ நல்லது செய்வார்" என்று அவரை சுற்றி இருந்தவர்கள் நினைத்து கொண்டு இருந்த நேரத்தில், இல்லத்தரசியாக இருந்த அவர் மனைவியையே அடுத்த கட்சி தலைவராகவதற்கு வகை செய்து விட்டு காலமாகி விட்டார்.

இன்னுமொருவர் சமீப காலம்வரை கெஅடிலான் கட்சியில் அன்வார் இப்றாகிமோடு இனைந்து பினைந்து, கூடிக் குலாவி கும்மி அடித்து விட்டு, அவருக்கு இடைத் தேர்தலில் இடம் கொடுக்க படவில்லை என்ற நிலை ஏற்பட்டவுடன், தானே ஒரு கட்சியை ஆரம்பித்து தான் பாரிசான் நேஷனலுக்கு நிபந்தனை அற்ற ஆதரவு தருவதாக மேடையில் பரைசாற்றியதோடு உட்கார்ந்து விட்டார்.

இந்த கோஸ்டிகள் தான் உங்களைப் பற்றி ஆழமாக யோசித்து உங்கள் இனத்திற்கு நல்லது செய்யப் போகிறார்களாக்கும் ? !! ஏன்ய்யா !! .... சரியான கேனக் கிருக்கனுங்களா இருக்கீங்களே!! நடக்கிறத பத்தி யோசிங்கய்யா !!


உண்மை நம்பர் 3

எது எப்படி இருந்தாலும் ஒன்று மட்டும் நிச்சயம். மலேசிய இந்தியர்களில் ஒரு சாரார் மிக மேம்பட்ட நிலையில் உள்ளவர்கள். அவர்களுக்கு எவர் தயவும் தேவையில்லை. ஐயாயிரம் ஆண்டு இந்திய கலாச்சாரத்தின் சாரம்சத்தை தாய்பாலோடு சேர்த்து குடித்து வளந்தவர்கள் போல் எந்த துரையிலும் பீடு நடை போடக் கூடியவர்கள். எந்த மாதிரி சூழ்நிலையிலும் பிரகாசிக்க கூடியவர்கள். அவர்கள் இந்த நாட்டில் முன்னுக்கு வந்து, இன்று மேம்பட்ட நிலைகளில் இருக்கிறார்கள் என்றால் அதற்கு காரணம் மலேசிய அரசாங்கம் அளித்த உதவிகள் அல்ல.

அவர்களின் இன்றைய செலுமை தம் தாய் வழி வந்த கலாச்சார பாரம்பரியத்தால் வந்த செலுமை. மலேசியா அல்லாது பிற எந்த நாட்டில் அவர்கள் குடி புகுந்திருந்தாலும், இந்த இந்திய வகுப்பினர் அங்கும் ஒரு மேம்பட்ட சமூகமாகத் தான் உருவெடுத்திருப்பார்கள். ஆனால் அந்த கெட்டகரியில் இங்குள்ள இந்திய தமிழர்கள் விகிதாச்சாரப் படி மிக சொர்ப்ப நிலையில் தான் பங்கு வகிக்கிறோம்.

காரணம் இங்கு வந்த நமது ஆரம்ப கால இந்திய தமிழ் ஸ்டாக்கின் தரம் மிக, மிகக் குறைவானதாக அமைந்தது தான். இதைபற்றிய நடைமுறை உண்மைகளை நாம் பார்க்க விளங்கினால், கிழே கொடுக்கப் பட்டுள்ள இரண்டு பட்டியல் உதாரணங்களே போதுமானவை-


பட்டியல் 1

மலேசிய இந்தியர்களைப் பற்றி மலேசிய அரசாங்கத்தாலும், வெளிநாட்டு சஞ்சிகைகளாலும் பிரசுரிக்கப் பட்ட கணக்கீடுகளின் படி மலேசியாவில் சிறைக் கைதிகளுல் 45 விழுக்காட்டினர் இந்தியர்கள்தான், குடும்ப நிலை வன்முறை குற்றம் புரிபவர்களுல் 20 விழுக்காட்டினர் இந்தியர்கள்தான், போதைப் பித்தர்களுல் 20 விழுக்காட்டினர் இந்தியர்கள்தான், பிச்சைக்காரர்களுல் 45 விழுக்காட்டினர் இந்தியர்கள்தான், கொலை கொள்ளை பொன்ற கொடூர குற்றங்கள் புரிபவர்களுல் 40 விழுக்காட்டினர் இந்தியர்கள்தான், குண்டர் கும்பல்களில் பங்கு பெருவர்களுல் 60 விழுக்காட்டினர் இந்தியர்கள்தான்.

சரி, இனி தமிழ் வாசகர்களான உங்கள் புத்திக் கூர்மைக்கு ஒரு 'டெஸ்ட்'. மேற்கூறிய கணக்கீடு பட்டியல் எந்த மலேசிய இந்திய இனத்திற்கு வெகுவாக பொருந்தும் என்று கூறுங்கள் பார்ப்போம். "கரெக்ட், கரெக்ட், கரெக்ட் ...... இந்திய தமிழர்களான நமக்குத்தான்".கொலை செய்வது, கொள்ளை அடிப்பது, பிச்சை எடுப்பது, கட்டிய மனைவியை காட்டுமிராண்டி தனமாக அடித்து உதைப்பது எல்லாவற்றிலும் இந்திய தமிழர்களை மிஞ்ச வேறு எந்த மலேசிய இந்திய இனத்தாலும் முடியாது. இதிலெல்லாம் நாம் தான் முடிசூடாத மன்னர்கள்.

சரி, பட்டியல் ஒன்றை பார்த்தோம் .... இனி பட்டியல் 2 க்கு வருவோமா !


பட்டியல் 2

மலேசிய இந்திய இனங்களைப் பற்றி பிரசுரிக்கப் பட்டுள்ள கணக்கீடுகளின் படி மலேசியாவில் உள்ள மருத்துவர்களுல் 28 விழுக்காட்டினர் இந்தியர்கள்தான், வழக்குரைஞர்களுல் 27 விழுக்காட்டினர் இந்தியர்கள்தான், பல் மருத்துவர்களுல் 21 விழுக்காட்டினர் இந்தியர்கள்தான், விலங்கின மருத்துவர்களுல் 29 விழுக்காட்டின இந்தியர்கள்தான், பொறிளியலாளர்களுல் 7 விழுக்காட்டினர் இந்தியர்கள்தான், கணக்கார்ய்வாளர்களுல் 6 விழுக்காட்டினர் இந்தியர்கள்தான்.

சரி, மலேசியாவில் இந்தியர்களுக்கு உள்ள எல்லா பிரச்சனைகளுக்கு நடுவிலும் முட்டி, மோதி, அடித்து, பிடித்து இப்படி மலாய்காரர்களுக்கும், சீனர்களுக்கும் ஈடுகொடுத்து வாழ்க்கையை ஜெயித்து வருபவர்கள் யார்? இந்திய தமிழர்களான நாமா?

நாமும் இந்த குழுமத்தின் ஒரு அங்கத்தின இனமாக இருக்கலாமே ஒலிய, நாமாக மட்டும் இங்கு இருக்க மாட்டோம். இந்த பட்டியலில் நாம் பத்தில் ஒரு மூன்று பேர் என்ற விகிதாச்சாரத்தில் தான் இருப்போம். பிற எழுவரும் தமிழர் அள்ளாத மற்ற இந்திய இனங்களைச் சார்ந்தவர்களாகத் தான் இருப்பார்கள்.

இதை மோலோட்டமாக பார்த்தால் உங்களுக்கு உண்மை புரியாது. காரணம், 'டாக்டர் சிவலிங்கத்திற்கு அமெரிக்க அரசாங்கத்தின் உயரிய விருது வளங்கப் பட்டுள்ளது. குமாரி சுமதி ஸ்.பி.எம் தேர்வில் 15 ஏ பெற்றார்' என்ற செய்தியைப் பார்ப்பீர்கள். ஆகா, தமிழன் கொடி பறக்குதைய்யா என்று மனதில் ஒரு பூரிப்பு எழும்பும். ஆனால் சிவலிங்கமும், சுமதியும் இந்திய தமிழர்களா, யாழ்பான தமிழர்களா, மலையாளிகளா, தெலுங்கர்களா என்பதெல்லாம் உங்களுக்கு தெரியாது. அவர்கள் பிற இந்திய இனங்களுல் யாராக வேண்டுமானாலும் இருக்கலாம்.

(முதலில் இந்த பதிவை நான் பிரசுரித்த போது 'எடிட்டிங்' மோசமாக இருந்தது. அதை சரிசெய்யும் பொருட்டு இந்த பதிவை மறுபடியும் செட் செய்து பிரசுரித்தேன். அதில் இந்த 7ஆம் பாகத்திற்கு இதற்கு முன்பு திரு. ஆய்தன், திரு. குமார் ஆகியோரிடம் இருந்து வந்திருந்த 2 பின்னூட்டங்களும், அதற்கு மறுமொழியாக நான் இட்டிருந்த 2 இரண்டு பின்னூட்டங்களும் காணாமல் போய்விட்டன. மன்னிக்கவும்).

5 comments:

shivkanggai said...

peeping at you blog moolam inta blog vanten . padika aarvam tantataal 13 iruntu 7 varai padithu vidden . talaikeelaaga vaall bagutiyil iruntu paditaalum miga sariyaaga paditatai purintu konden . nanraga irukiratu enru solla maadden.. aanaal satiamaaga irukiratu enru sollven. nalla unmaigal niraiya irukiratu. innum elutungal .

சாமான்யன் said...

வாருங்கள் சிவகங்கை,

ஆம் தம்பி ஈஸ்வராவின் peepingatyou புளோக்கில் நான் இளஞர்களுக்கு என்று ஒரு அறிவுரை பதிவை எழுதி இருந்தேன். அவர் புளோக்கின் மூலம் இங்கு வந்திருந்தால், நீங்கள் ஒரு இளஞராகத் தான் இருக்க வேண்டும். ஆனால், புனைப் பெயர் பெரிசுகளின் பெயராக இருக்கிறதே!

எப்படியோ, தாங்கள் இங்கு வந்து என் பதிவுகளை படிப்பது குறித்து எனக்கு மிகுந்த மகிழ்ச்சியே!

shivkanggai said...

tangal kanippu sariye .

vayataal.. perisu maddum alla , udalaalum ullataalum unarvaalum uyiraalum ena ellaa vagaiyilum idarpaadugalil 'perisuaai' vaalntu kalaitu poi vidda potum.. adangkaa manatudan kaate iruppatu inta iyalaamai malaysia tamilar anbusaarnta elluciku maddumtaan. samutaaya padru , tangalai ponra unarvaalargalaal melum perisu aagiratu. niraiya ellutungal.

சாமான்யன் said...

வாருங்கள் சிவகங்கை,

நம் சமுதாயத்தின் இயலாமையை நினைத்து தான் நானும் தினம் அங்களாய்கிறேன். ஆனால் என்ன செய்ய, எப்படி கணக்கு போட்டாலும் இந்தியாவில் இருந்து இங்கு வந்து குடியேறிய நம் தமிழ் இனத்தின் தறம் மிக, மிக குறைவானதாக அமைந்ததால் நாம் இன்றும், இனி என்றும் மற்ற இனங்களை விட தறம் குறைந்த இனமாகத்தான் இருப்போம். இருக்க போகிறோம்.

அது எப்படி, நாமும் மற்றவறின் நிலையை ஒத்த நிலைக்கு மேம்பாடு அடைய வாய்ப்பு இருக்கத்தானே செய்கிறது என்று நீங்கள் கேட்களாம்.

அதில் பாருங்கள் நாம் முதல் நிலையில் இருந்து ஐந்தாவது நிலைக்கு போவதற்குள், ஐந்தாவது நிலையில் இருக்கும் சீனர்களும், மலாய்காரர்களூம் ஒன்பதாவது, பத்தாவது நிலைக்கு போய்விடுவார்கள். பிறகு எப்படி நாம் மற்ற இனத்தவரை எட்டி பிடிப்பது?

உங்களாலும், என்னாலும் நம் இனத்தை நினைத்து அங்களாய்க்க மட்டும்தான் முடியும். முடிந்தால் நம் சுய குடும்ப அளவில் நம்மை உயர்த்தி கொள்ள பார்ப்போம்.

V.THAMIZHMARAIYAN said...

நல்ல முயற்சி.பாராட்டுகள்.உங்கள் தளத்தில் மலேசிய திருநாட்டில் வாழ்ந்த நம்முன்னோர்களின் பழையக் காலப் படங்களை வெளியிட வேண்டுகின்றேன். பழையக் காலத் தோட்டப்புற வீடுகள், பள்ளிகள் ஆயாக் கொட்டைகள் , கடைகள், விளையாட்டுத்திடல்கள், குளங்கள் , ஏரிகள் , கள்ளுக் கடைகள் இன்னும் பல... நன்றி.

Post a Comment