Sunday, May 17, 2009

உன்னையே நீ அறிவாய் ! (சமுதாய மாற்றம் என்பதன் இயல்பு) - பாகம் 10



மெல்ல, மெல்ல தான் சமுதாய மாற்றங்கள் வரும்

30, 40, 50 வருடங்கள் என்பது எல்லாம் தனி மனித அளவில் மிகப் பெரிய காலக் கட்டங்கள் தான். ஆனால் ஒரு ஒட்டுமொத்த சமூகத்தின் இன வளர்ச்சி, மொழி வளர்ச்சி, சமுதாய மேம்பாடு என்கிற கணக்கீட்டை முன் வைத்து பார்த்தால் இந்த கால நிலவரைகள் யாவும் கண் சிமிட்டும் நேரப் பொழுதுகளே.

ஒரு சமுதாயத்தை மாற்றி அமைக்கும் எந்த நிகழ்வும் 'உடனே, இப்போது, இன்றே' என்கிற நிலையில் என்றுமே நடந்தேறுவது கிடையாது. சமுதாய மாற்றம் எல்லாமே சிறிது சிறிதாக,மெது மெதுவாக, அதற்கான காலம் கனிந்து வரும்போது தான் (வந்தால் மட்டுமே) நடந்தேறும்.

இந்த நாட்டில் மலாய்காரர்கள் இன்று இவ்வளவு கம்பீரமாகவும், செழிப்பாகவும் இருக்கிறார்களே, மலாயாவை இவர்கள் முழுமையாக, ஆழும் உறிமையை பெற எவ்வளவு காலம் காத்திருந்தார்கள் என்று வாசகர்களான உங்களின் யாருக்காவது தெரியுமா?

அன்றைய மலாயாவில் மகானத்திற்கு, மாகானம் சுல்தான்கள் இருந்தார்கள் என்றாலும், 1511 ஆம் ஆண்டு மலாக்கா சுல்தானிய சமஸ்தானத்தை போச்சுகீஸ்தியர்கள் வீழ்த்தியதிலிருந்து, 1957 ஆம் ஆண்டுஆங்கிலேயர்களிடம் இருந்து நாடு சுதந்திரம் பெற்றது வரை மலாயா தீபகற்பம் போர்த்துகீசியர்கள், டச்சுகாரர்கள், ஆங்கிலேயர்கள் என்று வெவ்வேறு கால கட்டத்தில், வெவ்வேறு மேல் நாட்டவரின் ஆழுமையில் தான் இருந்து வந்துள்ள்து.

நாம் தற்போது பார்க்கும் மலேசிய நாட்டின் வளர்ச்சி, மலாய்காரர்களின் கம்பீரம், சொகுசு வாழ்க்கை எல்லாம் இப்போது .... ஒரு 52 வருடங்கள் இடைவேளியில் நடந்தவை தான். அதற்கு முன்பு பாவம் மலாய் இனத்தவரும் ஒரு அடிமைப் பட்ட வாழ்க்கை முறையை வாழ்ந்தவர்கள் தான்.

அவர்கள் சொந்த நாட்டையே தங்களுடையது என்று பெறுமையோடு சொல்லிக் கொள்ள மலாய் இனத்தவர் 446 ஆண்டுகள் காத்திருக்க வேண்டியதாக இருந்திருந்தால், கடல் கடந்து கூலி வேலைக் கென்று வந்த நாம், நமது உறிமை என்று நாம் நினைப்பதை நிலை நாட்டி கொள்வது அவ்வளவு எழிதாக நடக்க கூடிய விஷயமா?

இதன் உண்மையை நாம் சரியாக புரிந்து கொளவதற்கு நமது சரித்திர பின்னனியில் இருந்தே வேறு ஒரு உதாரணத்தை பார்ப்போம்.

திராவிடரின் சிந்து நதிக் கலாச்சாரம் 5,000 வருடங்களுக்கு முன்பு ஆரம்பித்தது என்று வரலாற்று ஏடுகள் கூறுகின்றன. திருக்குறளும், கம்பராமாயணமும் இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்பே எழுதப் பட்டிருக்கின்றன. அதுபோக மகா பாரதம், இதிகாசங்கள் என்று எத்தனையோ பிரம்மிக்கத் தக்க, சமுதாயத்தை நல்வழிப் படுத்தும் அறிவுக் கலஞ்சியங்கள் தமிழில் எழுதப் பட்டு நம்மிடையே ஆயிரக்கணக்கான வருடங்களாக இருந்து வந்திருக்கின்றன.

அப்படி இருந்தும் சுத்த திராவிடர்களான நம் பாட்டன், பூட்டன்கள் எல்லாம் எப்போது 'அ, ஆ, இ, ஈ .....' யை தெரிந்து, எழுத படிக்க ஆரம்பித்தார்கள்? மிஞ்சி, மிஞ்சிப் போனால் ஒரு 150 வருட இடைவேலைக்குள் தானே! ஏன்? அது அப்படித்தான் அய்யா!

சமூக வியல் நிகழ்வுகள் அப்படித் தான் நடந்தேறும். அன்றைய சமூக அமைப்பில், நாம் பிற்பட்ட வகுப்பினர், நமக்கு படிப்பு சொல்லி கொடுக்க வேண்டும் என்று பிற யாருக்கும் தோன்றவில்லை, நாம் அடிமைப் பட்டு இருப்பதுதான் பிறருக்கு நல்லதாக இருந்தது.

ஏறக்குறைய அன்றைய இந்தியாவில் இருந்த நமது பாட்டன், பூட்டன் நிலைதான் இன்றைக்கு நம் இனத்திற்கு மலேசியாவில் இருக்கும் நிலை. மலேசிய சமூக வியலில் நாம் ஒரு கீழ்மட்ட வகுப்பினர். நம்மை உயர்த்தி விட வேண்டும் என்று முக்கிய பொருப்பில் இருக்கும் யாருக்கும் எண்ணம் இல்லை.

"தமிழர்கள் நழிந்து போய், கீழ்மட்டத்தில் இருக்கிறார்களா? இருக்கட்டுமே, ஒரு சமுதாயத்தில் எல்லோரும் மேல் மட்டத்தில் இருக்க முடியாது தானே, யாராவது கீழ் மட்டத்தில் இருக்கத் தானே வேண்டும்" என்பது பிற இனத்தவரின் நிலைப் பாடு.

"நாங்கள் எல்லாம் எப்படி முன்னேறினோம்? கடின உழைப்பும், முயற்ச்சியும் இருந்தால் யார் வேண்டுமானாலும் முன்னேறலாம். இங்கு எல்லா வசதியும் வாய்ப்பும் எல்லோருக்கும் கொடுக்கப் பட்டிருக்கிறது. தமிழர்களுக்கு அதை முறையாக பயன் படுத்த தெரியாவிட்டால், அதற்கு யார் பொருப்பு?" என்று ஏதோ ஒரு வகையில் முன்னுக்கு வந்துவிட்ட பிற இந்தியர்கள், அவர்கள் நம்மோடு சம்பந்தப் படாதவர்கள் என்பதை பிற இனத்தினர் உணர வேண்டும் என்பதற்காக சொல்வர்.

ஆக உண்மை என்னவென்றால், இன்றைய சூழ்நிலையில் நாம் வேண்டாத, தேவையில்லாத, அதனால் கண்டுகொள்ளப் படாத ஒரு இனம். இது தான் அய்யா நடைமுறை உண்மை.

கடைசியில் எல்லாவற்றையும் கூட்டி கழித்து பார்த்தீர்களென்றால், "நம் வாழ்க்கை நம் கையில்தான் உள்ளது". வழியில் போகும் வேறு யாரும் நம்மை தூக்கிவிடப் போவது இல்லை. நாம் தான் நமது கையை ஊன்றி கரணம் பாய வேண்டும். இன்றைய உலக நடைமுறையில், இதை தவிர நமக்கு வேறு எந்த வழியும் கிடையாது. சொல்வது புரிகிறதா ?

அதற்கு மிகச் சிறந்த எடுத்துகாட்டு - மலேசிய சீனர்கள். அவர்களும் நம்மை போல் கூலிகளாக வந்தவர்கள் தான், இப்போது அவர்கள் என்ன கம்பீரத்துடன் இருக்கிறார்கள், பார்த்தீர்களா? யாருடைய தயவையும் எதிர்பார்த்தா சீனர்கள் இருக்கிறார்கள்?



அரசாங்க பிரதிநித்துவம்

இருந்தாலும் இது ஜனநாயக நாடு என்பதனால், நமது நலன்களை பாது காப்பதற்கு நம்மிலேயே ஒரு சிலரை தேர்ந்தெடுத்து, நமது பிரதிநிதிகளாக நியமிக்கும் தேர்தல் எனும் ஒரு சாதனம் நடைமுறை வழக்கத்தில் இருக்கிறது. அதன்படி நாமும், 52 வருடங்களாக செய்து வருவது போல நம்மில் யாராவது சில பருப்புக்களை தேர்ந்தெடுத்து நமது பிரதிநிதிகளாக பாராளுமன்றத்திற்கு அனுப்புவோம்.

அவர்களும் YB என்ற போர்வையை போர்த்தி கொண்டு, நம்மை பிரதிநிதிப்பதாக கூறிக் கொண்டு, அரசாங்கத்தில் அங்கம் பெறுவர். அதில் ஒருவர் மந்திரி சபையில் இடம் பெருவார்.

அவரும் ஆரம்பத்தில் தன் இனத்திற்கு உதவ வேண்டும் என்கிற முனைப்போடு தான் கடமையை ஆற்றுவார். ஆனால், பாருங்கள் கால ஓட்டத்தில் அவரும் "போகப் போகப் மாமியார் கழுதைபோல ஆனாள்" என்கிற பழமொழியை ஒததவராக ஆகி விடுவார்.

காரணம் நமது இனத்தின் சூழ்நிலை அப்படி. அரசாங்கத்திடம் இருந்து அடித்து, பிடித்து அவர் 10 லட்ச்ச ரிங்கிட் பெற்று வந்தால், இங்கு 50 லட்ச்சத்திற்கு தேவைகள் இருக்கும்.

நம் இனத்தின் ஆயிரத்தெட்டு பிரச்சனைகளையும் தீர்க்க வேண்டும் என்கிற முனைப்போடு மனுஷன் நாயாப் பேயா அழைந்து திரிந்து, மந்திரி சபையில் இருக்கும் பிற மந்திரிமார்களுடம் கெஞ்சி, கூத்தாடி அனுமதிகளைப் பெற்று, மலாய்கார அரசாங்க அதிகாரிகளிடம் அடித்து பிடித்து, சண்டை போட்டு அன்றைய பிரச்சனைகளை ஒவ்வொன்றாக தீர்த்து இரவு 11.00 மணிக்கு சோர்ந்து போய வீடு வந்து சேர்வார், அப்போது தான் ஒரு 20 பேர் வீட்டு கேட் முன்னால் நின்று கொண்டு காரை மறித்து "அய்யா, எங்கள் வீடுகள் எல்லாம் நெருப்பில் எறிந்து போச்சு, நீங்க தான் காப்பத்தனும் !!" என்று காலில் விழுவார்கள்.

இது என்றைக்காவது ஒரு நாள் நடைபெறும் நிகழ்வு என்றால் பாதகம் இல்லை. ஆனால், விடிந்தால் எந்திரித்தால் ஒரு மனுஷன் இந்த மாதிரி சூழ்நிலைகளையே பார்க்க நேரிட்டால், அவனும் என்ன ஆவான்.

நாளடைவில் அவர் மன நிலையும் "ச்சீ" என்று போய், ஏதோ அவரால் முடிந்த சில இனப் பிரச்சனைகளை கலைவதோடு நிருத்தி கொண்டு, தன் கட்சி / அரசாங்க பதவிகளை நிலை நிருத்தித் கொள்ளும் வேலைகளில் மும்முரம் காண்பிக்க ஆரம்பித்து விடுவார.

கடைசியில் இன அளவில் இங்கொன்றும், அங்கொன்றுமாய் சில பிரச்சனைகள் தீர்க்கப் பட்டாலும், நம்முடைய பெரும்பாலான பிரச்சனைகள தீர்க்கப் படாமலேயே இருக்கும். இதற்கிடையில் மனுஷனுக்கு மந்திரி பதவியின் சொகுசு ஒரு சிறு மயக்கத்தை கொடுத்திருக்கும், அத்தோடு சிறிது பணம் பார்ப்பதற்கான வாய்ப்புக்கள் அவர் வழியில் வந்திருக்கும். அவரும் பணம் பார்த்திருப்பார்.

இதற்கிடையில் "தலைவர் வாழ்க" என்று கரகோஷம் எழுப்பும் ஒரு ஜாலரா கூட்டம் நம்ம ஆளைச் சுற்றி எப்பவும் கூடி நிற்க்கும். கால ஓட்டத்தில், அரசியல் நடைமுறைப் படி இந்த ஜாலராக் கூட்டத்திற்கு 'ஏதாவது செய்து கொடுக்க வேண்டும்' என்கிற நிலைப் பாட்டிற்கு நம்ம ஆளும் தள்ளப் பட்டிருப்பார். (அப்படி அவர் செய்ய தவறினால், இரவோடு இரவாக ஜாலராக்கள் எல்லாம் எதிர் அனிக்கு தாவி நம்ம ஆளின் கட்சி பதவியே பறி போகும் நிலை ஏற்பட்டாலும் ஏற்பட்டு விடும் ).

பிறகு என்ன, "பெர்லீஸ் மாகான கட்சி தலைவர் குப்புசாமியா! சரீ ...... அரசாங்கத்தின் குறைந்த விலை வீட்டுடமை திட்டத்தின் கீழ் உங்கள் மாகானத்தில் இந்தியர்களுக்கு 150 வீடுகள் ஒதுக்கப் பட்டுள்ளன. அதை உங்கள் மூலம், உங்கள் பரிந்துரையின் பேரில், நீங்கள் சொல்பவருக்கு வழங்கும்படி ஏற்பாடு செய்துள்ளேன்" என்று முதுகைத் தட்டி கொடுத்த வாறு, சிரித்த வண்ணம் தலைவர் சொல்லி விட்டு போவார்.

பிறகென்ன, ஆரே மாதங்களில் சாதாரண குப்புசாமி லட்ச்சாதிபதி குப்புசாமி ஆகிவிடுவார். ஜனநாயகத்தில் நம்பிக்கை வைத்து ஓட்டு போட்ட நமக்கு ஒரு "ஆப்பு" !

கேட்கிறது, கேட்கிறது "முன்பைப் போல் அல்ல. நாங்கள் இனிமேல் தேர்ந்தெடுக்கும் அரசியல் தலைவர்கள் வித்தியாசமானவர்களாக இருப்பார்கள். மக்கள் தொண்டை தலைமேல் கொண்டு நடப்பவர்களை மட்டும்தான் நாங்கள் சமுதாய தலைவர்களாக ஏற்றுக் கொள்வோம்" என்று வாசகர்கள் கூறுவது எனக்கு நன்றாக கேட்கிறது.

இருந்தாலும் என்ன செய்வது - பத்துமலையில் இருக்கும் காக்காய் மட்டும் "முருகா, முருகா" என்றா கூவுகிறது. அதுவும் 'கா...கா, கா ...கா" என்றுதானே கூவுகிறது. ஏன் ? அதன் இயல்பு அப்படி அய்யா !

அதே மாதிரி தவறுகள் செய்வது, தப்புக்கள் பண்ணுவது மனிதனின் அடிப்படை இயல்பு ! நாம் யாரை தலைவராக தேர்ந்தெடுத்து நாடாளுமன்றத்திற்கு அனுப்பினாலும், முதலில் முறையாக சமூகப் பணி புரியும் அவர் கால ஓட்டத்தில் "அதே குட்டையில் ஊறிய மட்டை" என்று தான் ஆவார். அந்த நிலைப் பாட்டில் இருந்து யாரும் தப்ப முடியாது. இது தான் அய்யா வாழ்க்கையின் தன்மை.

ஆதலால், நாம் நம்மை பிரதிநிதிக்கும் சமுதாய தலைவர்களை என்றைக்கும் சாதாரண மனிதர்களாக மட்டுமே பார்க்க பலகி கொள்ள வேண்டும். அப்படி பார்க்க ஆரம்பித்தால் மட்டுமே சூல்நிலை நம்மை மிஞ்சிப் போகிற நேரத்தில், தலைவர்களின் சட்டையைப் பிடித்து கேள்வி கேட்கும் தைரியம் நமக்கு வரும். அவர்களும் பொது ஜனம் சட்டையை பிடிப்பார்கள் என்கிற பயத்தோடு நடந்து கொள்வார்கள்.


இந்த தொடரை முடிப்பதற்கு இன்னும் ஒரு ஆயிரத்து ஐந்நூறு வார்த்தைகளின் இருந்து இரண்டாயிரம் வார்த்தைகளை கொண்ட பதிவை நான் எழுத வேண்டியுள்ளது. இந்த பாகத்தோடு அதை சேர்த்து எழுதினால், இது மிக நீண்ட பதிவாக ஆகி விடும். ஆதலால், இந்த 10 வது பாகத்தை இத்தோடு நிறுத்தி கொள்கிறேன். என் அடுத்த பதிவு கீழ்கண்டவையை மையமாக கொண்டிருக்கும்:

- தனி மனித அளவில் நம் நிலையை மாற்றிக் கொள்ள நாம் என்ன செய்ய வேண்டும்.

- தமிழ் இனத்தின் ஒரு உறுப்பினனாக, நம் பங்குக்கு மற்றவர்களோடு சேர்ந்து இன அடிப்படையில் நாம் என்ன செய்ய முடியும்.

- தனி மனித அளவில் நமது அரசியல் பங்கு என்னவாக இருக்க வேண்டும்

- அரசியல்வாதிகள் ந்ம் இன பிர்ச்சனைகளை எங்கனம்அனுகலாம்

- அரசாங்கத்திடம் இருந்து என்னென்ன சலுகைகளை நாம்கேட்க வேண்டும்

- அவற்றுக்கு தேவையான நிதி ஒதுக்கிட்டை எங்கனம்பெறலாம்

- சாமானியனான நான் கடந்து வந்த சில வாழ்க்கை பாதைகள்

- செட்டியாரிடம் படித்த பாடம் எனும் ஒரு அறிவுறை துனுக்கு


அத்தோடு இந்த தொடரை முடித்து கொள்வேன்.

Wednesday, May 13, 2009

உன்னையே நீ அறிவாய் ! (மாறிய உலகில், மாறத் தெரியாத நாம்) - பாகம் 9

சென்ற பதிவில் "வேறு எல்லா அரசாங்க திட்டங்களையும் மீறி மலாய்க்கார மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவது ஒன்றே மலேசிய அரசாங்கத்தில் சகல நிலைகளிலும் ஒலிக்கும் தாரக மந்திரமாக மாறியுள்ள நிலைப்பாடு, வேறு யாரையும் விட இந்த நாட்டில் உள்ள இந்தியர்களை (குறிப்பாக மலேசிய தமிழர்களை) வெகுவாக பாதித்திருக்கிறது" என்று குறிப்பிட்டு எழுதியிருந்தேன். அதை இந்த பதிவில் முடிந்த அளவு விளக்கியுள்ளேன்:-


1970 க்கு முந்தைய கால கட்டத்தில் மலேசிய இந்தியர்களின் நிலை

நான் பார்க்க 1950 - 1960 களில் இந்த நாட்டில் இந்தியர்களின் நிலை ஓரளவிற்கு கம்பீரமானதாகத் தான் இருந்தது. படிப்பறிவு இல்லாதவர்கள் ரப்பர் எஸ்டேட்டுகளிலும், ரயில்வேயிலும், சாலை நிர்மாணிப்பு துறையிலும் கூலி ஆட்களாக வேலை செய்து வந்தனர்.

சிறிது படித்தவர்கள் டெலிகாம்ஸ், மின்சார வாரியம், ரயில்வேஸ், தபால் அலுவலகம், பொதுப்பணி, கல்வி அமைச்சு போன்ற அரசாங்க துறைகளிலும், தோட்டங்களிலும், சில தனியார் நிறுவனங்களிலும் ஆசிரியர்களாகவும், குமாஸ்தாக்களாகவும், டெக்னிஷியர்களாகவும் பணி புரிந்தனர்.

பல்கலைக்கழக படிப்பு முடித்தவர்கள டாக்டர்களாகவும், வழக்குரைஞர்களாகவும், இஞ்சினியர்களாகவும் செயல் பட்டு வந்தனர். வர்த்தகர்களாக வந்தவர்கள் வாணிபம், வர்த்தகம் என்று இருந்தனர்.

ஆக அந்த காலக் கட்டத்தில் எல்லா நிலைகளிலும் இந்தியர்களுக்கு இந்த நாட்டின் வளர்ச்சியில் ஒரு சிறந்த பங்கு இருக்கத்தான் செய்தது.

அதன் பிறகு 1970 ஆம் ஆண்டு தான் மேற்குறிப்பிட்ட புதிய பொருளாதாரக் கொள்கையும் அதை ஒட்டிய "எல்லா நிலைகளிலும் மலாய்காரர்களுக்குத் தான் முன்னுறிமை" என்ற கொள்கையும் அமுலாக்கப் பட்டன.

அத்தோடு இந்தியர்களுக்கு பல காலமாக அரசாங்கத்திலும், அரசாங்க சார்புள்ள ஸ்தாபணங்களிலும், சில தோட்டத்துறை நிறுவனங்களிலும் இருந்து வந்த சாதகமான அனுசரனையும் ஒரு முடிவுக்கு வந்தது.


1970 ஆம் ஆண்டிற்கு பிறகு இந்தியர்களுக்கு (குறிப்பாக தமிழர்களுக்கு) ஏற்பட்ட பின்னடைவிற்கான காரணங்கள்

இந்தியர்கள் பின்னடைவிற்கு பல காரணங்கள் இருந்த போதிலும் என் மனதிற்கு இந்த நாட்டில் நடந்த கீழ்கண்ட மூன்று நடவுகள் / நிலைப் பாடுகள் மிக முக்கிய காரணங்களாக தெரிகின்றன:-


1). மலாய் மொழி ஆட்சி மொழியாக உருவெடுத்தது

மலாயா சுதந்திரம் அடைவதற்கு நூற்று ஐம்பது ஆண்டுகளுக்கு முன்புவரை, இந்த நாட்டின் ஆட்சி மொழி ஆங்கிலமாகத் தான் இருந்து வந்ததுள்ளது. இதன் காரணமாக அன்றைய மலாய்காரர்களுக்கு நாட்டு ஆழுமையிலும், வர்த்தகத்திலும், பிற நடப்புகளிலும் பரவலாக அதிக உடன்பாடும், ஈடுபாடும் இல்லாத நிலையே இருந்து வந்திருந்தது.

அந்த கால கட்டம் (மலாய்காரர்களுக்கும் சீனர்களுக்கும் ஆங்கில அறிவு அதிகம் இல்லாது இருந்த நேரம்) ஆங்கிலத்தை நன்கு பேச, படிக்க, எழுத தெரிந்த யாழ்பான தமிழர்களுக்கும் மலையாளிகளுக்கும் வரப் பிரசாதமான ஒரு நேரம். சுருங்கச் சொன்னால், அது அவர்கள் கொடி கட்டி பறந்த ஒரு கனாக் காலம்.

ஆனால் சுந்திரத்திற்கு பிறகு, என்றைக்கு மலாய் தலைவர்கள் ஆங்கிலத்தை ஒதுக்கி விட்டு, மெல்ல, மெல்ல மலாய் மொழியை நாட்டின் ஆட்சி மொழியாகவும், பள்ளிகளில் போதனை மொழியாகவும் மாற்ற ஆரம்பித்தார்களோ, அன்றிலிருந்து இந்த இந்திய இனங்களுக்கு பல காலமாக அரசாங்கத்திலும், தனியார் துறையிலும் இருந்து வந்த அனுகூலமான சூழ்நிலை அடியோடு மாறியது. அதற்கு முன்பு அவர்கள் பிரத்தியேகமாக செய்து வந்த எல்லா வேலைகளும் மலாய்க்காரர்களுக்கு செல்ல ஆரம்பித்தன.


2). இந்தோனிசிய கள்ளக் குடியேறிகளின் வருகை

1970 ஆம் ஆண்டு தொடங்கி, 1990 ஆம் ஆண்டுக்குள் மலேசிய பொருளாதாரத்தில் மலாய்காரர்களின் பங்கீட்டை 30 விழுக்காடாக உயர்த்துவது என்பது தேசிய குறிக்கோளாக உருப்பெற்ற பட்ச்சத்தில், இந்த திட்டத்தை எப்படியாவது முழுமையாக செயல் படுத்திவிட வேண்டும் என்கிற முனைப்போடு மலாய் தலைவர்கள் அரசாங்கத்தின் எல்லா கிளைகளையும் முடக்கி விட்டு, அமுல்திட்டங்களை துரிதப் படுத்தினர்.

அப்படி அபரிமிதமான வேகத்தில் திட்டங்கள் துரிதப் படுத்தப் பட்ட காலக் கட்டத்தில், சீனர்கள் வியாபாரம் தொழில் கல்வி என்று எல்லா நிலைகளிலும் திறமைசாலிகளாக இருந்த படியால், நாடு அசுர வேகத்தில் வளம்பெற்ற போது அவர்களும் அந்த வளர்ச்சியோடு சேர்ந்து மிக அதிக வளம் பெற்றனர்.

((1970 ஆம் ஆண்டு மலேசிய பங்குச் சந்தையில் 22.5 விழுக்காடு பங்குறிமையை மட்டுமே வைத்திருந்த சீனர்கள், 1990 ஆம் ஆண்டுக்குள் வெளிநாட்டவர்களிடம் இருந்த பங்குகளையும் வாங்கி, மலேசிய பங்கு சந்தையில் தங்களுக்கு இருந்த பங்குறிமையை 45.0 விழுக்காடாக உயர்த்தி கொண்டுள்ளனர். அதே காலக் கட்டத்தில் மலாய்காரர்கள் தங்கள் பங்குறிமையை 2.4 விழுக்காட்டிலிருந்து, 19.0 விழுக்காடாக உயர்த்தி கொண்டுள்ளனர். இந்தியர்களின் பங்குறிமை 1970 லும் சரி, 1990 லும் அதே 1.0 விழுக்காடாகத் தான் இருந்திருக்கிறது)).

ஆனால், தமிழர்கள் தமிழ் மொழியைத் தவிர வேறு எந்த பாஷையும் தெரியாத நிலையில், அதுவரை எஸ்ட்டேட் சுழ்நிலையைத் தவிர வேறு எதையும் பார்த்தறியாத நிலையில், பிற இனத்தவர்களோடு பழகிய அனுபவம் இல்லாத நிலையில், தாழ்வு மனப்பான்மையால் நெஞ்சை நிமிர்த்தி பேசக்கூட திராணியற்ற நிலையில், தங்களைச் சுற்றி என்ன நடக்கின்றது என்பதைக் சறியாக புரிந்து கொள்ள தெரியாத, முடியாத ஏமாளிக் கூட்டமாகத் தான் இருந்திருக்கிறோம்.

அதற்கு தகுந்தாற்ப் போல் குறைந்த சம்பளத்திற்கு வேலை செய்யும் கடின உழைப்பாளிகளான இந்தோனிசிய கள்ளக் குடியேறிகளுக்கு தோட்டதுறை வேலைகளும், கட்டுமானம் உள்ளிட்ட மேலும் பற்பல பணிகளும் சென்றடைந்தன..

இது கால ஓட்டத்தில் தமிழர்களை பல வகைகளில் பாதித்தாலும், நாட்டின் துரித வளர்ச்சிக்கு (அதன் மூலம் ஏற்பட்ட மலாய் இனத்தின் மிகத் துரித வளர்ச்சிக்கு) இந்தோனிசியர்களின் பங்கு முக்கியமாக அமைந்ததால், அரசாங்கமும் அதை சுத்தமாக கண்டுகொள்ளாமல் விட்டது.

மேலும் மலாய் மொழியை சரளமாக பேசக் கூடியவர்களாகவும், இஸ்லாமிய மதத்தை சார்ந்தவர்களாகவும் இந்தோனிசியர்களும், வங்காள தேசத்தவர்களாகவும் இருந்தது இந்த இனத்தவர்களுக்கு மேலும் அனுகூலமாக அமைந்தது.

கால ஓட்டத்தில் பிற நாட்டு தொழிலாளிகளின் எண்ணிக்கை படிப்படியாக உயர்ந்து, இன்று மலேசியாவில் உள்ள வெளி நாட்டு தொழிலாளர்களின் எண்ணிக்கை மலேசிய இந்தியர்களின் எண்ணிக்கையை விட அதிகமாக உள்ள நிலைக்கு இட்டுச் சென்று விட்டது.

இப்படி நமக்கு முறையாக வந்து சேர்ந்திருக்க வேண்டிய பல கீழ்மட்ட வேலை வாய்ப்புகளும், சிறு அங்காடி வியாபார வாய்ப்புக்களும் கூட இந்த நாட்டிற்கு சற்றும் சம்மந்தமில்லாத இனங்களுக்கு போய் சேர்ந்ததும், நாம் இந்த நாட்டில் இதுவரை தேராமல் போனதற்கு மற்றுமொரு காரணம்.

சரி, மலேசிய அரசாங்கம் வெளிநாட்டிலிருந்து அதிக அளவு தொழிலாளர்களை இங்கு கொண்டு வந்து சேர்த்ததர்க்கான காரணம் என்ன என்று நினனக்கிறீர்கள்?

மலாய்காரர்களின் பங்குறிமையை இருபது வருடங்களுக்குள் 30 விழுக்காடு ஆக்க வேண்டும் என்றால், அரசாங்கம் எல்லா பொருளாதார திட்டங்களையும் துரிதப் படுத்தி ஆக வேண்டும். அத்தோடு புதிய பொருளாதார கொள்கையை முழுமையாக அமுல்படுத்த வேண்டுமெனில் நாட்டில் வேலை வாய்ப்புக்கள் அதிக அளவு மேம்படுத்த பட வேண்டும்.

இதற்கு வெளிநாட்டு நிறுவனங்கள் மலேசியாவில் மூலதனம் செய்வதற்கு தோதாக தொழிலாளர் சட்ட திட்டம் இருக்க வேண்டும். பாலிசை அகற்றி விட்டு பச்சையாக சொன்னால் - இந்நாட்டில் தொழிலாளிகளுக்கு கொடுக்கப் படும் சம்பளம் குறைவானதாக இருக்க வேண்டும், தொழிற்சங்க நடவடிக்கைகள் குறைக்கப் பட வேண்டும்.

இதையெல்லாம் அமுல் படுத்த வேண்டுமானால், வெளிநாட்டில் இருந்து சட்ட பூர்வமாகவோ (அல்லது கள்ளக் குடியேறிகளாகவோ) தொழிலாளர்களை இங்கு அனுமதிக்க வேண்டும்.

இந்த நாட்டிலேயே பிறந்து வளர்ந்து குடியுறிமை பெற்றவர்கள் தங்களுக்கு அதிக சம்பளம் வேண்டும், வீட்டு வசதி வேண்டும், போனஸ் அலவன்ஸ் எல்லாம் வேண்டும், கூடுதல் மருத்துவ வசதி வேண்டும் என்று கொடி பிடிப்பார்கள்.

ஆனால் ஜனத்தொகை அதிகமாக கொண்ட இந்தோனீசியா, வங்காள தேசம் போன்ற நாடுகளில் இருந்து வரும் கள்ளத் தொழிலாளர்கள் கொடுப்பதை வாங்கிக் கொண்டு 'கப் சிப்' என்று வாயை மூடிக் கொண்டு வேலையை உருப்படியாக செய்வார்கள்.

நடைமுறையில் அரசாங்கத்தின் இந்த தொழிலாளர் கொள்கை நம் இனத்தை எப்படி பாதித்து இருக்கிறது என்றால்:-

1980 களில் நாடு துரித பொருளாதார வளர்ச்சி கண்ட போது, எல்லா இனங்களுக்கும் வேலை வாய்ப்புக்கள் அதிகரித்த போதிலும், மலேசியாவில் கணிசமான வெளிநாட்டு தொழிலாளர் எண்ணிக்கை இருந்ததால், நம்மை ஒற்றிய மற்ற நாடுகளை விட இங்கு தொழிலாளர் சம்பளம் குறைவாகவே தான் இருந்து வந்துள்ளது.

இதில் கவனிக்க படவேண்டியது என்னவென்றால், சம்பளம் குறைவாக இருந்தது மற்ற இரண்டு இனங்களையும் விட தமிழர்களைத் தான் வெகுவாக பாதித்தது. நம் இனத்தவர் தான் தோட்டங்களில் தங்களுக்கு இருந்த வேலையையும், அத்தோடு வந்த வீட்டு வசதியையும், கூட்டு இன வாழ்க்கை சூழ்நிலையையும் விட்டு விட்டு பட்டன விழும்புகளுக்கு கையில் எதுவுமே இல்லாமல் வந்தவர்கள்.

சீனர்களைப் பற்றி சொல்லவே வேண்டாம். அவர்கள் எந்த சூழ்நிலையையும் சவாளாக ஏற்றுக் கொண்டு முண்டி, அடித்து வாழ்க்கையை அட்டகாசமாக வெள்பவர்கள். சம்பளம் போதவில்லை என்றால், அதற்காக ஏதாவது உபாயம் கண்டுபிடித்து ஊதியத்தை மேம்படுத்தி கொள்ள தெரிந்தவர்கள்.

மலாய் இனத்தவர் இந்த நிலைப்பாட்டால் பாதிக்க பட்டார்களா என்று பார்த்தால். நிச்சயமாக இல்லை. இந்த குறைவான சம்பள நிலை மலாய்காரர்களை எந்த விதத்திலும் பாதிக்கவில்லை என்பதை திட்டவட்டமாக கூறலாம்.

காரணம், ஒரு மலாய் குடும்பத்தில் 5 உறுப்பினர்கள் இருந்தால், அவரவர் படிப்பை பொருத்து, அவர்கள் ஐவருக்கும் அரசாங்கத்திலோ, தனியார் நிறுவனங்களிலோ, தொழிற்சாலைகளிலோ வேலை கிட்டியது.
அது போக மற்ற இனங்களுக்கு இருந்த பல செலவுகளை மலாய்காரர்களுக்கு வைக்காமல், அரசாங்கமே அவர்களின் பெரும்பாலான் தேவைகளை பூர்த்தி செய்தது.

கிம்மாஸ் என்ற மலாய்காரர்களுக்கான பாலர் பள்ளியில் இருந்து, குறைந்த விலை வீட்டுடமை திட்டங்களில் இருந்து, மலாய் பிள்ளைகளின் பிரத்தியேக படிப்பிற்கென்று அரசாங்கத்தால் முழுமையாக முதலிடு செய்யப்பட்ட சிறப்பு பள்ளிக்கூடங்களில் இருந்து, பங்கு பரிவர்த்தனையில் மலாய்காரர்கள் பங்கு பெருவதற்கென்று அமைக்க பட்ட 'அமானா சாஹாம் நேஷனல்' போன்ற பங்கு நிதி திட்டங்களில் இருந்து, அவர்கள் வியாபாரத்தில் ஈடுபடுவதற்காக வழங்கப் பட்ட சிறப்பு சலுகைகளில் இருந்து, மலாய் பிள்ளைகளுக்கு பொது பல்கலைகழகங்களில் வழங்கப் பட்ட முன்னுறிமையில் இருந்து, அவர்களுக்கு வழங்கப் பட்ட உபகாரச் சம்பளங்களில் இருந்து எத்தனை எத்தனையோ நூற்றுக் கணக்கான வழி வகைகளில் மற்ற இனஙகளை காட்டிலும் மலாய் இனத்தவர் பயன் அடைந்த காரணத்தால், மலாய்காரர்களுக்கு இந்நாட்டில் அவர்கள் வாங்கும் சம்மளம் குறைவாக இருந்தாலும், போதுமானதாகவே இருந்தது.


3). சீனர்கள் அரசாங்கத்திடம் இருந்து எதையும் பெரிதாக
எதிர்பார்க்காத நிலைப்பாடு

மலேசிய இந்தியர்களின் துரதிஸ்டங்களிலேயே பெரிய துரதிஸ்டம் என்னவென்றால், மற்ற எந்த இனமும் அல்லாமல், சீனர்கள் நம்மோடு சேர்ந்து மலேசியாவில் ஒரு சிறு பாண்மை இனமாக அமைந்தது தான்.

எந்த நாட்டிலும் சரி, சீனர்கள் யார் உதவியையும் எதிர் பார்த்து வாழ்வது கிடையாது. '"எங்களை சுயமாக விட்டு விடுங்கள். எங்கள் வாழ்க்கையை உயர்த்தி கொள்வது எப்படி என்பது எங்களுக்கு தெரியும்", என்கிற ஒரு கம்பீர குணாதிசியம் கொண்டவர்கள் சீனர்கள்.

ஆக, 24.0 விழுக்காடு ஜனத்தொகையை கொண்ட சீனர்கள் தங்களுக்கு என்று எந்த பிரத்தியேக சலுகைகளையும் கேட்டு பெறாத நிலையில், வெறும் 7.5 விழுக்காடு ஜனத்தொகையை உடைய நமக்கு அரசாங்கம் எப்படி பிரத்தியேகமான சலுகைகளை செய்து கொடுப்பார்கள்?

அரசாங்கத்திடமிருந்து சீனர்கள் எதாவ்து பிரத்தியேகமாக கேட்டு பெற்றிருந்தார்கள் என்றால், அவர்களோடு சேர்ந்து இந்தியர்களும் ஏதாவது விஷேசமாக பெற்று கொண்டிருக்கலாம். ஆனால், சீனர்கள் அரசாங்கத்திடம் இருந்து மிகுதியாக எதையுமே கேட்பது கிடையாது.

அவர்கள் கேட்பதெல்லாம் கூடுதலான சீனப் பள்ளிகள். அப் பள்ளிகளுக்கு சிறிது நிதி ஒதுக்கீடு. சீனப் பிள்ளைகளின் திறமைக்கு ஏற்ற பல்கலைக்கழக வாய்ப்பு, மிகத் திறமையான மாணாக்கர்களுக்கு சில உபகாரச் சம்பளங்கள். அரசாங்க நிலையில் தொழிதுறை வாய்ப்புக்கள். அவ்வளவுதான்.

அவர்கள் இனத் திறமையையும், சீனர்கள் இந்த நாட்டிற்கு செய்து வரும் மிகப் பெரிய பொருளாதார சேவையையும், மிகக் கூடுதலாக அவர்கள் இனம் கட்டும் வருமான வரியையும் வைத்து அவர்கள் கேட்பதை ஒப்பிட்டு பார்க்கும் போது, சீனர்கள் தங்களுக்கு வேண்டும் என்று கேட்கும் சலுகைகள மிக, மிக, மிகச் சாதாரணமானவையாகவே எனக்கு படுகின்றன.

இதற்கு நடுவில் நாம் நமது இனத்தின் ஆயிரத்தெட்டு பிரச்சனைகளையும், விண்ணப்பங்களையும் அரசாங்கத்தின் முன் வைப்பது சிரமமான வேலையாகவே இன்று வரை இருந்து வந்துள்ளது.

அதற்கு தகுந்தாற்ப் போல் நமது தானைத் தலைவர் - "என்னைத் தவிர வேறு எந்த லப்பனாலும் இந்தியர்களின் நலங்களை பாதுகாக்க முடியாது", என்று கூடாரம் அடித்து 30 வருடங்களாக டேரா போட்டு உட்கார்ந்து உள்ளார்.

உலகம் நம்மை பார்த்து நகைக்கின்றது. காலம் நம்மை தாண்டி ஒடுகின்றது. நாம் நின்ற இடத்திலேயே நிற்கின்றோம் - திக்கும் தெரியாது, திசையும் தெரியாது. பேந்த, பேந்த முழித்த வண்ணம்.