tag:blogger.com,1999:blog-3884149786495317295.post511084815988976905..comments2023-09-25T23:14:26.857+08:00Comments on மலேசியத் தமிழன்: உன்னையே நீ அறிவாய் ! (நான் யார்? நீ யார்? நாம் யார்?) - பாகம் 6சாமான்யன்http://www.blogger.com/profile/14509839460474340739noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-3884149786495317295.post-48459554464656890812009-09-07T02:59:36.779+08:002009-09-07T02:59:36.779+08:00வாருங்கள் சிவகங்கையாரே,
//(ஜா)சாதிக்கும் அப்பால் ...வாருங்கள் சிவகங்கையாரே,<br /><br />//(ஜா)சாதிக்கும் அப்பால் தமிழரின் நிலை இழக்கும் பண்பே இன்றைய எல்லா இழி நிலைக்கும் காரணம் என்று எழுத நினைக்கும் எனக்கு தற்போது களம் இல்லை// என்று எழுதி உள்ளீர்கள்.<br /><br />உலகில் மற்ற எந்த சமூகத்திலும் இல்லாத ஒரு பண்டைய சமூகவியல் அம்சம் நம்மிடையே இருக்கும் சாதி எனும் சாபம். இதைப் பற்றி பேசுவது அநாகரீகமாக ஆகிவிட்ட சூழ்நிலையில், நம்மிடையே உள்ள பெரும் சிந்தனைவாதிகள் உள்ளிட்ட எல்லோருமே சாதியத்தை ஒதுக்கி வைத்து விட்டுத்தான் நம் இனத்தின் அவல நிலையை ஆராய விளைகிறார்கள். அங்குதான், தப்பே ஆரம்பமாகிறது. <br /><br />ஹாராப்பா, மொகெஞ்ஜோடாரோ காலத்தில் இருந்து ஐயாயிரம் வருடங்களுக்கு மேலாக தொடர்ச்சியாக சமுதாயத்தின் ஒவ்வொரு அங்க அசைவையும் பாதித்த ஒரு ஆழமான தொப்பில் கொடி அம்சத்தை ஒதுக்கி வைத்து விட்டு என்ன சமூக ஆராய்ச்சியை நாம் செய்வது? <br /><br />அப்படி செய்யப் படும் ஆராய்ச்சி நமக்கு எதுவும் நல் வழி காட்டும் என்று நினைக்கிறீர்களா?<br /><br />தமிழகத்தின் நிலை வேறு. அங்கு தமிழர்களால், தமிழருக்காக என்று அரசாங்கமே நடத்தப் படுகிறது. <br /><br />மேலும் மேல் சாதிக்காரர்களை பேரளவு ஓரங்கட்டி விட்டு பிற சாதிக்காரருக்கு முன்னுறிமை சட்ட ரீதியாக கொடுக்கப் பட்டு, அரசாங்கம் நடத்தப் படுகிறது. அங்கு சாதியத்தில் குறைந்தவர்கள் தான் 62 வருடங்களாக "பூமிபுத்திராக்கள்". ஆதலால், அங்கு சாதியத்தின் தாக்கத்தை ஆராயாத சமூக அமைப்பு இருக்கலாம்.<br /><br />ஆனால், மலேசியாவில் நம் நிலைமை வேறு. பெரியார் போன்று இங்கு நமக்கு விழிப்புணர்ச்சி ஏற்படுத்த யாரும் இல்லை. பொட்டை கண்ணன்கள் ராஜியத்தில் ஒற்றை கண்ணன் ராஜா என்பது தான் நமது நிலை. எல்லா பிராடுகளிலும், தமிழ் நன்றாக பேசத் தெரிந்த பிராடு தலைவன்.<br /><br />இதற்கிடையில் மலாய்காரருக்கு தான் முன் உறிமை என்கிற அரசாங்க நிலைப்பாடு. சீனர் எனும் அசாத்திய இனம் நம்மோடு சேர்த்து 'சிறுபாண்மையினர்' என்று முத்திரை குத்தப் பட்டது மற்றொரு நிலைப்பாடு. நம்மோடு வந்து சேர்ந்தெல்லாம் கூலிப் பட்டாளமாக அமைந்தது இன்னுமொரு நிலைப்பாடு. இந்த நிலைப்பாடு அத்தனைக்கும் நடுவில், நம் இனம் வழி கண்டு பிடித்து விடியலைத் தேடிச் செல்ல வேண்டும்.<br /><br />இந்த நிலையில், நம்மை பற்றிய உண்மைகளை மறைத்து, மறந்து வழி கண்டு பிடிக்க வேண்டும் என்று நினைப்பது விவேகம் அற்ற செயல். இதனால் தான் சமுதாயத்தைப் பற்றி எத்தனையோ தமிழ் சிந்தனைவாதிகள் எவ்வளவோ பேசியும், எழுதியும் வந்தாலும் நடைமுறையில் அவர்களால் எந்த பிரயோஷனமும் இதுவரை இல்லாது போயுள்ளது.<br /><br />என்னைக் கேட்டால், மலேசிய தமிழச் சிந்தனைவாதிகள் சாதியம் என்பதையும் அதன் தாக்கத்தையும் அப்பட்டமாக திறந்து பார்த்து ஆய்வு செய்ய வேண்டும். உண்மைகளை உண்மைதான் என்று கண்டறிய என்னையா வெட்கம் ?<br /><br />நம்மை பற்றிய உண்மை நிலைகளை முழுவதுமாக தெரிந்து, அறிந்து, ஏற்றுக் கொண்டு அதன் பின்னர் தான் நம் சமுதாயத்தை நல் வழிப் படுத்த முடியும் என்பது என் கருத்து. ஆனால், அதெல்லாம் நடைமுறையில் சாத்தியப் படாது என்பதும் என் கருத்தே.சாமான்யன்https://www.blogger.com/profile/14509839460474340739noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3884149786495317295.post-64363734998921094642009-09-07T00:24:38.595+08:002009-09-07T00:24:38.595+08:00சாமான்யரே,
தாங்கள் நிச்சயமாக நல்ல ஆத்மா . அந்த ...சாமான்யரே,<br /><br />தாங்கள் நிச்சயமாக நல்ல ஆத்மா . அந்த ஆத்மாவை தாங்கி இருக்கும் தங்கள் உடலும் அதன் செயல்களும் என்றென்றும் நல்லதாகவே தர்மம் தவறாது இருக்க என் போன்றோர் கரங்கள் எப்போதும் இறைவனை தொழுத வண்ணம் இருந்தே ஆக வேண்டும். எங்களை போன்றோர் நெகிழும் மனங்களும் அவர்தம் தொழுகை கரங்களும் <br />இறைவனால் கைவிடப்படுவதில்லை . <br /><br />மழையின் வருகை பூமிக்கு அவசியம் , ஆனால் அது சூடாகவோ அல்லது கொதிப்பாகவோ வந்தால் என்னாவது . இடி மின்னல் எனும் பயங்கரங்களில் இருந்து புறப்பட்டு வந்தாலும் மழை தன்னிலை மாறாது , அதன் தன்மை தண்மை மட்டுமே . அது என்றுமே தன்னிலை இழக்காது . ஆனால் மாந்தர் நாம் அவ்வாறு அல்ல . நிலை கெட்ட மனிதரால் சூழப்படுகிறோம் , நிலை கெடுகிறோம் , பின் நிலை கெட்ட மனிதர் ஆகி விடுகிறோம் , நிலை கெட்ட மனிதரால் தான் உலகில் இவ்வளவு அவலங்கள் . அதிலும் தமிழர்போல் உலகில் நிலை இழந்த , நிலை கெட்ட இனம் வேருண்டா?. அதைதான் தங்கள் கட்டுரையை படித்தபோது நான் உணர்ந்தேன் . <br /><br />(ஜா)சாதிக்கும் அப்பால் தமிழரின் நிலை இழக்கும் பண்பே இன்றைய எல்லா இழி நிலைக்கும் காரணம் என்று எழுத நினைக்கும் எனக்கு தற்போது களம் இல்லை . காலம் தாழ்த்தினாலும் காலத்தோடு தங்களைப் போன்றோரோடு வந்து விடுவேன் . <br /><br />' நெஞ்சு பொறுக்குதில்லை , இந்த <br /> நிலை கெட்ட மனிதரை நினைத்துவிட்டால் ' என்ற பாரதி கூற்றை தங்கள் கட்டுரை <br /> கருவாக சுமக்கிறது எனும் உணர்வோடு விடை பெறுகிறேன்.shivkanggainoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3884149786495317295.post-89583116264683658422009-09-06T12:42:08.916+08:002009-09-06T12:42:08.916+08:00வாருங்கள் சிவகங்கையாரே,
கோப படுவதால் ஆகப் போவது ஒ...வாருங்கள் சிவகங்கையாரே,<br /><br />கோப படுவதால் ஆகப் போவது ஒன்றுமில்லை. மலேசியத் தமிழனால் புத்தியை உபயோகிக்க முடியாது போனதுதான் நம் பிரச்சனைகளுல் எல்லாம் பெரிய பிரச்சனை.<br /><br />நம்மை சுற்றி உள்ள சூழ்நிலையைப் பாருங்கள். நாமும் கூலிகளாகத் தான் இந்த நாட்டிற்கு வந்தோம். சீனர்களும் கூலிகளாகத் தான் இங்கு வந்தார்கள். இன்று தமிழ் இனம் இங்கு நலிந்து, மெலிந்து, கேட்பாரற்ற ஒரு பரிதாபக் கூட்டமாக காட்சி அளிக்கிறோம். ஆனால் சீனர்களோ, பறந்து விரிந்து, சிறந்து, 'நாங்கள் உலகில் உள்ள எவருக்கும் சலைத்தவர்கள் அல்ல' என்று மார் தட்டும் விதத்தில் கொடி கட்டி பறந்து கொண்டிருக்கிறார்கள். <br /><br />அரசியல் ரீதியாக, இன ரீதியாக, விஷமம் செய்யாது யாரும் அவர்களை தடுத்து, இழுத்து, நிறுத்தாமல் விட்டால் இந்த நாட்டு சீனர்களால் எந்த அளவு சாதனைகள் செய்ய முடியும் என்பதற்கு அப்பட்டமான சான்று மலேசியாவில் இருந்து பிரிந்து சென்று இன்று அவர்கள் சிங்கப்பூரை ஆட்சி புரியும் முறைதான்.<br /><br />நாமும் அவர்களைப் போல்தானே இங்கு வந்தோம். நமக்கு மட்டும் ஏன் இந்த அவலம் ??? இந்த மாதிரி கேள்விகளுக்கு பதில் என்ன என்று கண்டு பிடிக்க விலைந்தாலே, நமது வண்டவாளம் என்ன என்பது அப்பட்டமாக தெரிந்து விடும். <br /><br />ஆனால் பாருங்கள், உண்மை என்ன என்பதை ஆழமாக ஆராய்ந்து தெளிவு பெருவதைவிட நாம் வெத்து சவுண்டு விடுவதில்தான் மும்முரம் காண்பிப்போம். ஏன் அப்படி? இதை நான் தமிழ் தெரிந்த ஒரு மறத் தமிழரிடம் கேட்டால் அவர் என்ன சொல்லுவார் என்று பார்ப்போம்:-<br /><br /><br />"கல் தோன்றி மண் தோன்றா காலத்து முன் தோன்றிய மூத்த குடி நாங்கள். சொல்லிக் கொடுக்கும் இனம் தமிழினம், நீர் சொல்லி கொடுக்க விழைவது அறிவீனம்".<br /><br />அது சரி அய்யா. தாங்கள் ஏன் அழுக்கு வேஸ்டியும், அறை வயிருமாக காட்சி அழிக்கிறீர்கள்?! மத்த இனத்தவன் எல்லாம் செழிப்பா தெரியிரானுகளே?!<br /><br />"டேய் !!....ஆய் !!...ஊய் !!.... இந்த கேள்வி எல்லாம் இங்கு கேட்காதே அப்பனே! நான் மறத் தமிழன், அஞ்சா நெஞ்சன். வீரன், தீரன், சூசூ..ர..ரன்.... ஆஆஆ !!.... துடிக்கிறது மீசை...".<br /><br />மன்னித்து கொள்ளுங்கள் அய்யா, எனக்கு இப்போது நேரம் இல்லை. நானும் தமிழன் தான். என் பஸ் வந்திருச்சு. நேரத்தோடு போனேன் என்றால், ஏதோ நாலு காசு பாத்து புள்ளை குட்டியை காப்பாத்தலாம். இப்படியே தங்களோடு நின்று பேசிக் கொண்டு இருந்தேன் என்றால் எனக்கும் "டங்குனக்கா, டங்கானா தான்". வர்ரேன். <br /><br />xxxxxxx<br /><br />நெஞ்சு பொருக்குதில்லையே, இந்த வடி கட்டிய முட்டாள் மலேசிய தமிழரை நினைத்து விட்டால் !!!!!சாமான்யன்https://www.blogger.com/profile/14509839460474340739noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3884149786495317295.post-19673128990761378822009-09-06T00:41:39.822+08:002009-09-06T00:41:39.822+08:00http://3.bp.blogspot.com/_M9HOVM16ESM/SjHImXMKsuI/...http://3.bp.blogspot.com/_M9HOVM16ESM/SjHImXMKsuI/AAAAAAAAADs/ZQKDYTqfnYM/s1600/bharathi.jpgshivkanggainoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3884149786495317295.post-4401345170513401292009-08-21T01:45:27.029+08:002009-08-21T01:45:27.029+08:00வாருங்கள் சிவகங்கையாரே,
நான் தாண்டி வந்த கரடுமுரட...வாருங்கள் சிவகங்கையாரே,<br /><br />நான் தாண்டி வந்த கரடுமுரடான வாழ்க்கைப் பாதைகளில் நான் படித்த பாடங்களினாலும், பயணித்து வந்த நாடுகளில் பார்த்த ஜனங்களினாலும், பலகிய என்னற்ற இனங்களிடம் கண்ட தன்மையினாலும் பிற போதுவான தமிழர்களை விட எனது பார்வை என்றுமே சிறிது வித்தியாசமாத் தான் இருந்திருக்ன்றது. என்றென்றும் இருக்கும்.<br /><br />சிவகங்கையாரே, தமிழ் இனத்திடம் பலவற்றும் இருக்கலாம். "கல் தோன்றி மண் தோற்றாக் காலத்தின் முன் தோன்றிய மூத்த குடியாக" தமிழ் இனம் இருந்திருக்கலாம். ஆனால் கேள்வி என்னவென்றால், அந்த குடியில் மலேசிய தமிழர்களின் பாட்டன் பூட்டன்கள் எல்லாம் என்ன நிலையில் இருந்தார்கள் என்பதுதான்.<br /><br />பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் எழுதப் பட்ட எத்தனையோ இதிகாசங்களும், வள்ளுவமும், கல்விக் கழஞ்சியங்களும் நம்மிடையே இருந்தும், நாம் எழுதப் படிக்க கற்று கொண்டது ஒரு நூற்று ஐம்பது வருட இடைவேளைக்குள் தான். <br /><br />பச்சையாக சொன்னால் "கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தில் தோன்றிய மூத்த குடியில்" மலேசிய தமிழர்களின் முப்பாட்டன்கள் பிறருக்கு கக்கூஸ் கழுவிவிடும் நிலையில் தான் இருந்திருக்கிறார்கள். இது தான் அப்பட்டமான, அலுத்தம் திருத்தமான, அசைக்க முடியாத உண்மை. <br /><br />நம்மை நாம் உண்மையிலேயே மேம்படுத்த வேண்டுமானால், முதலில் உண்மைகளை உண்மை என்று ஏற்று கொள்ள வேண்டும். இரண்டாவதாக, நாம் எங்கிருந்து வருகிறோம் என்பதை போலித்தனம் இல்லாமல் அப்பட்டமாக ஆராய்ந்து அறிந்து கொள்ள வேண்டும்.<br /><br />நான் யார் என்று கேட்டுள்ளீர்கள். இது எதற்கு நண்பரே? சாமான்யன் என்றென்றும் சாமான்யனாகவே இருக்க விரும்புகிறேன். அதோடு அனாமதேயமாக இருப்பதில் ஒரு மிகப் பெரிய சுதந்திரம் இருக்கின்றது. அதை இழக்க நான் விரும்பவில்லை.<br /><br />"உணர்ச்சி என்பது வேண்டும்" என்று பாரதி பாடிச் சென்றது போல் நம் இருவருக்குமே உணர்ச்சி பிழம்பு சிறிது அதிகமாகவே இருக்கிறது. என்ன, அதன் வெளிப்பாடுதான் சிறிது வேறுபட்டுள்ளது.சாமான்யன்https://www.blogger.com/profile/14509839460474340739noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3884149786495317295.post-81541012053283045502009-08-20T23:53:18.496+08:002009-08-20T23:53:18.496+08:00'நமது கலாச்சாரத்தின் எல்லா மேன்மையான அம்சங்களு...'நமது கலாச்சாரத்தின் எல்லா மேன்மையான அம்சங்களும் ........'<br />எனும் தங்கள் சொல் ஒன்று போதும் . <br /><br />சாமான்யரே,<br /><br />நம் தமிழர் மேன்மையானவர். ஆடை அலங்காரம் ஒப்பனைக் கலை , ஆடல் பாடல் இசை சங்கீதம் நடனம் நாடகம் கலை கற்பனை காவியம் கதை கவிதை திரம் & திறம் , வள்ளுவம் காட்டும் காதல் கற்பு காமம் வாழ்க்கை நெறி , அறு சுவையாகிய கரிப்பு உறைப்பு கசப்பு புளிப்பு இனிப்பு துவர்ப்பு உணவு சுகம் , மருத்துவம் கண்டவர்கள் மட்டும் அல்ல தமிழர்கள் ... அதனை உலகிற்கு வழங்கியவர்கள் . இவ்வுலக வாழ்க்கை மட்டுமல்லாது அவ்வுலக வாழ்க்கையின் அருளும் பக்தியும் முக்தி நெறியும் உலகிற்கு ஈந்தவர் தமிழர். நகைநட்டு ஆபரணம் செய்தவர் தமிழர் . மோகஞ்ஜோதரோ ஹரப்பா கட்டட கலை பட்டண கலை உருவாக்கியவர்கள் தமிழர் . நமது சிற்பிகளும் அவரது சிற்பங்களும் கோயில்களும் எதற்கு ஈடு ? . காலத்தை வென்று வாழும் தமிழையும் அந்த மொழியின் இலக்கணத்தையும் இலக்கியத்தையும் கண்டவர்கள் தமிழர் , கல்வியும் திண்ணை பள்ளியும் சங்கமும் இல்லாதவர்களா தமிழர் . அரசியல் போர் படை வீரம் விளையாட்டு கண்டவர் தமிழர் . எல்லாம் கண்டவர் தமிழர் என்று தெரிந்தும் பாரதி வீறு கொண்டு அன்று கலங்கினான் , அவர் போலவே தாங்கள் தமிழர் மேன்மையெல்லாம் தெரிந்தும் தமிழர் இயலாமைகள் அடாவடிதனங்கள் நினைத்து இன்று கலங்குகிறீர்கள்... தாங்கள் யார் ? .shivkanggainoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3884149786495317295.post-21633980213780453772009-08-16T18:08:16.186+08:002009-08-16T18:08:16.186+08:00வாருங்கள் சிவகங்கையாரே,
சிவகங்கைச் சீமையின் மண்வா...வாருங்கள் சிவகங்கையாரே,<br /><br />சிவகங்கைச் சீமையின் மண்வாசத்தோடு, அதன் ஆழ் உணர்வுகளை வெளிக்காட்டும் வகையில் தங்கள் முதல் தமிழ் எழுத்து இருக்கிறது. <br /><br />தங்களைப் போன்றோரை பார்க்கும்போது என் மனதில் ஒரு இயல்பான ஈர்ப்பு எப்பொழுதும் எழும்பும். இப்போது தங்களை பார்க்கும்போதும் அந்த ஈர்ப்பு அரும்புகிறது.<br /><br />தாங்கள் மேலே எழுதியிருப்பதை நம் கலாச்சாரத்தில் தோய்த்தெடுத்த ஒரு பழமைவாதியினால் மட்டும் தான் எழுத முடியும். தங்களைப் போல் நம் இனத்தின் தன்மையை நானும் உணராமல் இல்லை, ஆனால் நான் நம் பழமையோடு நமது இன்றைய நிலைமையையும் சேர்த்தே பார்க்கிறேன்.<br /><br />ஒரு மேன்மையான கலாச்சாரம் என்பது மாறி வரும் உலகத்தின் எல்லா சூழ்நிலைகளிலும் அதன் அங்கத்தினனுக்கு வழி காட்டியாக இருக்க வேண்டும். அப்படி அது இருந்தால் மட்டும் தான் அதை ஒரு மேம்பட்ட கலாச்சாரம் என்று நாம் ஒத்துக் கொள்ள முடியும்.<br /><br />கூட்டி கழித்து பார்த்தால், நமது கலாச்சாரத்தின் எல்லா மேன்மையான அம்சங்களும், அதோடு ஒட்டி உருவாகிய சாதியம் எனும் சாபத்தின் இயல்பால், தாக்கத்தால் கறைபட்டு போய் இருக்கின்றன. அதுதான் உண்மை.சாமான்யன்https://www.blogger.com/profile/14509839460474340739noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3884149786495317295.post-72415502069787223202009-08-16T16:12:45.493+08:002009-08-16T16:12:45.493+08:00சாமான்யரே
தாமதமாக தமிழில் டைப் அடிக்க கற்றுக் க...சாமான்யரே<br /><br />தாமதமாக தமிழில் டைப் அடிக்க கற்றுக் கொண்டாலும் காலத்தோடு கற்றுக் கொண்டு விட்டேன் பார்த்தீர்களா . என்னை இப்படி தமிழில் அடிக்க தூண்டியது தங்கள் எழுதில் காணப்பட்ட உணர்வுகள்தான் . அந்த உணர்வுகளுக்கு நன்றி. <br /><br />வாருங்கள் என்று ஒவ்வொருவரையும் அழைக்கும் அந்த சின்ன அன்புதான் விடாமல் படிக்க தூண்டுகிறது . சின்ன சின்ன அன்புகளுக்கு குழந்தைகள் , வளர்ப்பு பிராணிகள் மட்டும் அல்ல கல்லும் , பாறையும் கூட பதில் கொடுக்கும் . அதனால் தான் ஈரம் கொண்ட பச்சை வேர் தன்னை ஊடுருவ அவை அனுமதிக்கிறது . அது போல் தான் தமிழர் . அவரை அவராகதான் நாம் புரிந்து கொள்ள வேண்டும் . மிக ஆதியான ரொம்ப பழையவர்கள் நம் தமிழர் . கல்லும் பாறையும் போன்றவர்கள். இயற்கை வாழ்க்கை முறையானவர். நவீன வாழ்க்கை முறை மெல்ல மெல்ல வருவதும் நல்லது . இப்போது பாருங்கள் , நானும் தமிழில் <br /> அடிக்க கற்றுக் கொண்டேன் . தங்கள் போன்றோர் முயற்சி வீண் போகாது . இன்னும் எழுதுங்கள்.shivkanggainoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3884149786495317295.post-40690829530101464412009-08-11T23:02:00.960+08:002009-08-11T23:02:00.960+08:00சிவகங்கை,
நான் என் பதிவுகளின் மூலம் மலேசிய தமிழ் ...சிவகங்கை,<br /><br />நான் என் பதிவுகளின் மூலம் மலேசிய தமிழ் இனத்தை சாடு, சாடேன்று சாடுவதற்கு காரணம் யாரையும் காயப் படுத்த வேண்டும் என்பதற்காக அல்ல.<br /><br />காலம் நம் இனத்தை தாண்டி மிக வேகமாக ஓடிக்கொண்டிருக்கிறது. விரைவில் நம் தூக்கத்தில் இருந்து விழிக்காவிட்டால், நாம் இப்போது உள்ள நிலையை விட மிகவும் பின் தங்கிய ஒரு இனமாக நிச்சயம் ஆகிவிடுவோம். <br /><br />ஏதோ, சாட்டையால் அடித்தால் போல் எழுதுவதனால் என் எழுத்துக்களை படிக்கும் பத்து பேரில் ஒரு இரண்டு தமிழர்களின் சிந்தனையையாவது நான் தூண்டி விட முடியுமா என்று பார்க்கிறேன். அவ்வளவுதான்.<br /><br />எனது சாட்டை அடி எழுத்துக்களுக்கான காரணமே ஆழ்ந்த சமுதாய உணர்வுதான். இல்லையென்றால், எல்லோரைப் போலவும் பாலிசாக, பாட்டி வடை சுட்ட கதை, இதிகாசங்கள் அதைச் சொன்னன, வள்ளுவர் இதை சொன்னார் என்று எதையாவது பொழுது போக்கிற்காக எழுதி விட்டு என் பாட்டுக்கு என் ஜோலியை பார்த்து கொண்டு போய் கொண்டே இருப்பேன்.சாமான்யன்https://www.blogger.com/profile/14509839460474340739noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3884149786495317295.post-84771827758761073602009-08-11T00:31:20.168+08:002009-08-11T00:31:20.168+08:001-5 bagutigalaiyum, mutal pagutiyil iruntu ippotu...1-5 bagutigalaiyum, mutal pagutiyil iruntu ippotutaan paditu muditen . paguti 1- saatiyam , paguti 2 - kaalil vilum visayam , paguti - 3, 4, 5 seenar visayam .. ellaame unmaigal .<br /><br />ellame unmai enumpotu , etho sila satiyangkalai avai sumantu irukkinrana enru taangal unarnte ellutukireergal enru en aall manam nambukiratu. <br /><br />taai oruti pillaiyai adipatan nokkam , valiyai etpaduta vendum enbataagavaa irukkum ?shivkanggainoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3884149786495317295.post-38411060218279601722009-07-26T17:48:15.046+08:002009-07-26T17:48:15.046+08:00வாருங்கள் சிவகங்கை,
தாங்கள் இங்கு வந்து என் பதிவு...வாருங்கள் சிவகங்கை,<br /><br />தாங்கள் இங்கு வந்து என் பதிவுகளை படிப்பது குறித்து எனக்கு மிகுந்த சந்தோஷம்.<br /><br />ஒரு வேண்டுகோள். மீதி உள்ள ஆறு பதிவுகளையும் முதல் பதிவில் இருந்து ஆரம்பித்து படிக்கும்படி கேட்டு கோள்கிறேன். காரணம் இந்த தொடரில் உள்ள என் எழுத்தின் தன்மையை புறிந்து கொள்ள தாங்கள் முதல் இரு பதிவுகளையும் முதலில் படித்திருக்க வேண்டும்.சாமான்யன்https://www.blogger.com/profile/14509839460474340739noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3884149786495317295.post-71784098665264668552009-07-26T13:41:12.009+08:002009-07-26T13:41:12.009+08:00taamatamaga vantu paditaalum kaalatodu paditu vidd...taamatamaga vantu paditaalum kaalatodu paditu vidden . paguti 6 - malayia indiargalil ivvalavu verupaadugalai naangal palar arintirukka villai. ellaarum tamilar enru ninaitu viddom .ippadi padda tagavalgalai niraiya sollungal. ennaipol palar kaalam kadantu paditaalum sariyaana vaaippin potu paditu viduvaargal , tevai padumpotu payanpadutium kolvaargal . unmai ellutuku enrum sakti atigam .<br />sorvillaamal elutungal. matra pagutigalai piragu kandippaga padippen . ippolutu kan valikkiratu .nanrishivkanggainoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3884149786495317295.post-88479178103065322852009-04-07T13:03:00.000+08:002009-04-07T13:03:00.000+08:00வாருங்கள் சதீசு குமார்,"என்னய்யா, கடைசி பதிவு பதிப...வாருங்கள் சதீசு குமார்,<BR/><BR/>"என்னய்யா, கடைசி பதிவு பதிப்பிக்கப் பட்டு 10 நாட்கள் ஆகின்றன, இன்னமும் உங்களின் அடுத்த பதிவை காணோமே!?" என்று கேட்க நினைத்து, அதை பாலிசாக ஞாபகப் படுத்தி விட்டு சென்ற உங்களின் நல்ல மனசிற்கு எனது நன்றி.<BR/><BR/>விரைவில் அடுத்த பதிவை பதிப்பிக்கிறேன். சில சமயங்களில் நமது மூலையில் பின்னிப் பினைந்து கிடக்கும் பல தரப்பட்ட எண்ணங்களையும், சிந்தனைகளையும் வகைப் படுத்தி, நாம் மனதில் என்ன நினைக்கிறோம் என்பதை நமது அளவில் முறையாக நாம் புரிந்து கொள்வதே பெரும் பிரச்சனையாக உள்ளது. <BR/><BR/>இருந்தாலும், என் சுய சிந்தனைப் பிரச்சனை எல்லாவற்றையும் சீர்படுத்தி, என் ஆழ் மனதில் தேங்கி நிற்கும் எண்ண உறுத்தல்களுக்கு வடிவம் கொடுத்து, படிப்பவர் புரிந்து கொள்ளூம் வகையிலான என் அடுத்த பதிவை விரைவில் எழுதுகிறேன். <BR/><BR/>இது எனக்கு ஒன்றும் புதுக் குழப்பம் அல்ல. நான் எதை எழுத உட்கார்ந்தாலும், இந்த குழப்ப நிலை என் பக்கத்திலேயே தானும் ஒரு நாற்காலியைப் போட்டு உட்கார்ந்து விடும்.<BR/><BR/>சிறிது நாள் அவகாசம் கொடுங்கள். உங்கள் எதிப் பார்ப்பை மிஞ்சிய ஒரு பதிவை கொடுக்கிறேன்.<BR/><BR/>சாமான்யன்சாமான்யன்https://www.blogger.com/profile/14509839460474340739noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3884149786495317295.post-20913258234991089622009-04-06T22:21:00.000+08:002009-04-06T22:21:00.000+08:00சமூக விகிதாச்சாரமும், அவரவர்களின் அடைவுநிலைகளையும்...சமூக விகிதாச்சாரமும், அவரவர்களின் அடைவுநிலைகளையும், அதற்கான காரண காரணியங்களையும் நன்கு அலசியுள்ளீர்கள். மேலும் பல தகவல்கள் கொண்ட அடுத்த பதிவினை விரைவில் எதிர்ப்பார்க்கிறேன்.Sathis Kumarhttps://www.blogger.com/profile/12941206392502088681noreply@blogger.com